வானியல் ரீதியாக, நமது புவிக்கோ ளின் பருவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நான்கு குறிப்பிட்ட நாட்க ளில் மாறுகின்றன. அவை இரண்டு சங்கிராந்திகள்/நீண்ட பகல்/நீண்ட இரவு நாள் மற்றும் 2 சம கால நாட்கள். நீண்ட பகல் உள்ள நாள் ஜூன் மாதமும், நீண்ட இரவு உள்ள நாள் டிசம்பர் மாதமும் வருகிறது. இரண்டு சமகால நாட்கள் (உத்தராயணம் மற்றும் தட்சினாயணம்) மார்ச் மாதத்தில் ஒன்று மற்றும் செப்டம்பரில் ஒன்று வருகிறது. இந்த நிகழ்வு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் மற்றும் பூமியின் அச்சில் உள்ள சாய்வு இவற்றைப் பொறுத்தே ஏற்படுகிறது.
நீண்ட பகல்/நீண்ட இரவு ஏற்படும் நாளை சங்கி ராந்தி என்கின்றனர். இதில் நீண்ட பகல் ஏற்படும் நாள் கோடைகால சங்கிராந்தி என்றும், நீண்ட இரவு ஏற்படும் நாள் குளிர்கால சங்கிராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. வடதுருவம் சூரியனுக்கு மிக அருகில் சாய்ந்தால் கோடைகால சங்கிராந்தி ஏற்படுகிறது. வட துருவம் சூரியனில் இருந்து வெகு தொலைவில் சாய்ந்திருக்கும் போது குளிர்கால சங்கிராந்தி ஏற்படுகிறது. நீண்ட பகல்/கோடைகால சங்கிராந்தி, ஜூன் 21 அன்று நிகழ்கிறது. நீண்ட இரவு/ குளிர்கால சங்கிராந்தி, இது டிசம்பர் 22 அன்று நிகழ்கிறது. கோடைகால சங்கிராந்தியில், பூமி சூரியனை நோக்கி சாய்ந்திருப்பதால், பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளைக் கொண்டு வருகிறது. குளிர்கால சங்கிராந்தி/நீண்ட இரவு நாளில் சூரியன் பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட இரவினைக் கொண்டுவருகிறது. நீண்ட பகல் நேரம் என்பது ஜூன் 21ஆம் நாள் நிகழ்ந்தது. இப்போது நீண்ட இரவு நேரம் என்பது டிசம்பர் 22 அன்று நிகழ இருக்கிறது.
சமகால நாட்கள் என்றால், இரவும் பகலும் சமமாக இருக்கும். அதாவது பகல் 12 மணி நேரம் சரியாக இருக்கும்.. அதே போல இரவு சரியாக 12 மணி நேரம் இருக்கும். இப்படிப்பட்ட சூழல் வருடத்தில் இருமுறை/ இரு நாட்களில் மட்டுமே நிகழும். அப்போது பகல் நேரமும், இரவு நேரமும் சரியாக 12 மணி நேரம் இருக்கும்.
பருவ காலங்கள் ஏற்படுவதேன்?
நமக்கு ஏன் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. பூமியின் தன் அச்சில் 23.5செல்சியஸ் டிகிரி சாய்வாக உள்ளதால், பூமியில் பருவகாலங்கள் ஏற்படுகின்றன. இது பூமியின் சாய்வின் நேரடி விளைவாகும். இது அச்சு சாய்வு என அழைக்கப்படுகிறது. ஒரு அச்சு சாய்வு இல்லாமல், இருந்திருந்தால் நாம் பருவ காலங்களை அனுபவிக்க முடியாது. எப்போதும் ஒரே வகையான சூழல்தான் இருந்திருக்கும்.
பூமியின் அச்சு 23.5 செல்சியஸ் சாய்வாக இருப்ப தனால் தான், ஆண்டின் சில பகுதிகளில், தெற்கு அரைக்கோளம் சூரியனின் கதிர்களுக்கு சற்று அதிக மாக வெளிப்படும், அதே சமயம் வடக்கு அரைக்கோ ளம் குறைவாக வெளிப்படும் மற்றும் நேர்மாறாகவும் இருக்கும். பூமி சாய்வாக இருந்து சுற்றிக்கொண்டே இருப்பதனால், சில சமயம் வடக்கு கோளத்தில் அதிக வெப்பமும், அதே சமயம் தெற்கே குறைவான வெப்ப மும் இருக்கும். இந்த டிசம்பர் மாதம் அதே நிலைதான். பூமியின் இந்த சாய்மானம்தான், நமது பருவ காலங்கள் மற்றும் கோடை காலம்/ குளிர் காலம் ஏற்பட காரணியாகும்.
இதுதான் நமது பூமிக்கோளுக்கு குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் வானிலை வேறுபாடுகள் மற்றும் சூரியனில் இருந்து வரும் அதிக அல்லது குறைவான ஒளி மற்றும் ஆற்றல் ஆகிய வற்றிலிருந்து பல்வேறு விளைவுகளை ஏற்படுத்து கிறது, இதுதான் பருவநிலை மாற்றங்கள் என்கி றோம்.
ஜூன் மாதம் நிகழும் சங்கிராந்தி/நீண்ட பகல் நாள், அதன் பின்னர் சூரியனின் வெப்பக் குறைவை யும், ஒவ்வொரு நாளும் பகலின் குறைவு நேரம் / இரவின் அதிக நேரம் நிகழ்வதைக் குறிக்கும். டிசம்பரில் நிகழும், சங்கிராந்தி கோடையின் தொடக்கத்தை குறிக்கிறது. அதன் பின்னர் இரவு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும், பகல் நேரம் அதிகரிக்கும்.
வடக்கு அரைக்கோளத்தில், ஜூன் மாத சங்கி ராந்தி கோடையின் வானியல் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் அந்த ஆண்டின் அதிக பகல் நேரம் கொண்ட நாள். பூமியின் மிகவும் வடக்குப் பகுதி களில், சூரியன் அடிவானத்திற்குக் கீழே மறையா மல் பல நாட்கள் அல்லது வாரங்கள் கடக்கக்கூடும். அதே சமயம் அண்டார்டிகாவில் ஒப்பிடக்கூடிய நேரம் இருட்டாக இருக்கலாம். அங்கு நிறைய நாட்கள் இரவாக இருக்கும். தெற்கு அரைக்கோளத்தில் கோடை காலம் தொடங்கும் மற்றும் வடக்கில் குளிர்காலம் தொடங்கும், டிசம்பர் மாத சங்கிராந்திக்கு நேர்மாறா னது உண்மை.
சங்கிராந்திகள் பெரும்பாலும் தலைமுறைக ளுக்குப் பின்னோக்கிச் செல்லும் பல்வேறு கொண்டாட்டங்களால் குறிக்கப்படுகின்றன, அவற்றில் மிகவும் நன்கு அறியப்பட்ட கிறிஸ்துமஸ் விடு முறை டிசம்பர் சங்கிராந்திக்கு சில நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பேகன் மரபுகளிலிருந்து அதன் பல மரபுகளை கடன் வாங்குகிறது.
உத்தராயணம்/சமகால நாட்கள்
உத்தராயணம் என்பது சூரியன் பூமியின் நில நடுக்கோடு வழியாக செல்லும் நிகழ்வாகும். அப்போது ஒரு நாளின் பகல் மற்றும் இரவு நேரம் இரண்டும் மிகச் சரியாக 12 மணி நேரம் என்றாக இருக்கும். வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளம் இரண்டும் பகல் மற்றும் இரவு நேரங்களை தோரா யமாக சமமான அளவில் அனுபவிக்கும் நாள், சம கால நாள் ஆகும். சமகால நாட்கள், சங்கிராந்திக ளுக்கு இடையில் நேரடியாக நிகழ்கின்றன. மேலும் இவை வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலங்களின் தொடக்கத்தைக் குறிக்கின்றன.
பூமியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உத்தராய ணங்கள்/சமகால நாட்கள் இருக்கின்றன. ஒன்று மார்ச் 21 ஆம் தேதி , இதனை வசந்த கால துவக்கம்.(Vernal Equinox) என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று செப்டம்பர் 22 ஆம் தேதி நடந்த தட்சினா யணம் (தட்சின்= தெற்கு, அயனம்= நகர்வு). இப்போது சூரியன் தெற்கு நோக்கி நகரும். (நீங்கள் கூட காலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுபவராக இருந்தால், எங்கே சூரியன் உதிக்கிறது என்று பார்த்து, இந்த டிசம்பர் 22க்குப் பின்னர் எந்த திசை நோக்கி நகருகிறது என்பதை அறியலாம்.).
மார்ச் மாதம் 21 ஆம் நாளுக்குப் பின்னர் சூரியன் வடக்கு நோக்கி நகரும். இதனை உத்தராயணம் (உத்தர்=வடக்கு, அயனம்=நகர்வு) என்று சொல்கின்ற னர். வடக்கு அரைக்கோளத்தில் வசந்த உத்தராய ணம் மற்றும் தெற்கில் இலையுதிர் உத்தராயணம் ஆகும். செப்டம்பர் உத்தராயணம் என்பது வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர்கால உத்தராயணம் மற்றும் தெற்கில் வசந்த காலம் ஆகும்.
சமகால நாட்களின் போது, சூரியக் கதிர்கள் பூமியின் மேற்பரப்பிற்கு செங்குத்தாக பிரகாசிக்கும். உத்தராயணத்தின் போது மட்டுமே பூமியின் 23.5° அச்சு சூரியனை நோக்கி இருக்கும்.அல்லது விலகிச் சாய்வதில்லை.
பூமத்திய ரேகைக்கு தெற்கே குறுகிய நாள்
ஜூன் 21 என்பது தெற்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிகக் குறுகிய நாளாகும். இது உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்தை பாதிக்கிறது.
குளிர்கால சங்கிராந்தி 2023:
குளிர்காலத்தின் முதல் நாள் ஆண்டின் மிகக் குறுகிய நாளாகும்
சங்கிராந்திக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அதிக பகல் வெளிச்சத்தைக் கொண்டு வருகிறது.ஆண்டின் இருண்ட நாள் டிசம்பர் 22 அன்று நெருங்கி வருகிறது.
நிலநடுக்கோட்டுப் பகுதிகள்
நிலநடுக்கோடு, 0° அட்சரேகையில், ஆண்டு முழு வதும் சூரியனின் கதிர்களின் அதிகபட்ச தீவிரத்தைப் பெறுகிறது. இதன் விளைவாக, பூமியின் நிலநடுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகள் ஒப்பீட்டளவில் நிலையான சூரிய ஒளி மற்றும் சிறிய சமநிலை மாறு பாட்டை அனுபவிக்கின்றன. சமன்பாடுகள் மற்றும் வான பருவங்கள் பொதுவாக மழைப்பொழிவு (மழைக் காலங்கள் மற்றும் வறண்ட பருவங்கள்) போன்ற காலநிலை-உந்துதல் வடிவங்களைக் காட்டிலும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன.
பூமியின் அட்சரேகையுடன் பருவகால மாறுபாடு அதிகரிக்கிறது. வளிமண்டல ஒளிவிலகல் பகல் மற்றும் இரவின் “உச்சந்திப்பு” நீளத்தின் ஏற்றத் தாழ்வை அதிகரிக்கிறது. சுமார் 30° அட்சரேகையில், பகல் இரவை விட எட்டு நிமிடங்கள் அதிகம்.
துருவப் பகுதிகள்
வளிமண்டல ஒளிவிலகல் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கில் மிகவும் வியத்தகு நிலையில் உள்ளது, பகல் வெளிச்சம் சுமார் 12 மணி நேரம் 16 நிமிடங்கள் நீடிக்கிறது. இந்த வழியில், துருவப் பகுதி களில் உள்ள உத்தராயணங்கள் “நள்ளிரவு சூரியனில்” இருந்து “துருவ இரவுக்கு” மெதுவாக மாறுவதைக் குறிக்கின்றன. “நள்ளிரவு சூரியன்” என்பது சூரியன் ஒருபோதும் அடிவானத்திற்கு கீழே இறங்காத நிகழ்வை விவரிக்கிறது, இது ஒரு நாளில், அப்பகு தியை 24 மணி நேரமும் சூரிய ஒளியில் குளிக்க வைக்கிறது. “துருவ இரவு” எதிர் நிகழ்வை உண்டு பண்ணுகிறது. அங்கு சூரியன் ஒருபோதும் உதிக்காத நேரம், 24 மணி நேரமும். இந்த காலத்திற்கு பூமியின் இப்பகுதியை இருட்டாக வைத்திருக்கும். அதாவது பூமியின் துருவத்தில் சில மாதங்கள் முழுநாளும் பக லாகவும், சில மாதங்கள் முழு நாளும் இரவாகவும் இருக்கும்.